search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரமேஷ் சென்னிலதா"

    நடிகர் மோகன்லால் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் தவறை செய்யமாட்டார் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். #Mohanlal
    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். மோகன்லால் தனது பெற்றோர் நினைவாக விஸ்வசாந்தி பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் நடைபெறும் பணிகளுக்கு ஆதரவு தர கேட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

    அப்போது பிரதமர் மோடி, நடிகர் மோகன்லாலின் செயல்பாடுகளை பாராட்டியதோடு, அவரது அமைப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார்.

    இந்த தகவலை பிரதமர் மோடியும், நடிகர் மோகன்லாலும் டுவிட்டரில் பதிவிட்டனர். பிரதமர் மோடி டுவிட்டரில் மோகன்லாலை வெகுவாக பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். மோகன்லாலும் பிரதமருடான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாக கூறி இருந்தார்.


    பிரதமர் மோடியை மோகன்லால் சந்தித்து பேசியது பற்றி தகவல் வெளியானதை தொடர்ந்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் அடுத்து வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக மோகன்லால் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டது.

    இதுபற்றி நடிகர் மோகன்லாலிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நான் எனது வேலையை செய்து கொண்டிருக்கிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இப்போது நான் இது பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மோகன்லால் பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:-

    கேரளாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் மோகன்லால் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் தவறை செய்யமாட்டார். அவர் ஒரு போதும் இது போன்ற தவறை செய்யமாட்டார் என்று நான் நம்புகிறேன்.

    மோகன்லால் ஒரு பிரபல நடிகர். அவரை பலரும் நேசிக்கிறார்கள். அவர் முட்டாள் தனமான முடிவை எடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன், என்றார்.

    உடனே நிருபர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேருபவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று கூறுகிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு ரமேஷ் சென்னிதலா, தனது பேச்சை திரித்து கூறுவதாக தெரிவித்தார். #RameshChennithala #Mohanlal
    கேரள மக்களுக்கு எந்தவிட முன்னறிவிப்பு இன்றி நள்ளிரவில் அணைகள் திறக்கப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெருமழை காரணமாக மாநிலத்தில் உள்ள பெரிய அணைகளான இடுக்கி, பாணாசுரசாகர், செறுதோணி, மலம்புழா உள்பட அனைத்து அணைகளுக்கும் அதிக அளவு நீர் வரத்து இருந்ததால் பாதுகாப்பு கருதி 44 அணைகள் திறந்து விடப்பட்டன. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.

    வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 370 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு, உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இயற்கையின் சீற்றம் காரணமாக இந்த பேரிழப்பு கேரளாவுக்கு ஏற்பட்டு உள்ளது.

    அதேசமயம் மாநில அரசும் இந்த பேரழிவுக்கு காரணம் என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.


    கேரளாவில் நிகழ்ந்திருக்கும் வரலாறு காணாத பேரழிவுக்கு இயற்கை மட்டும் காரணம் அல்ல. 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்து இருப்பதற்கு இயற்கையை மட்டும் குறை கூறமுடியாது. முழுக்க, முழுக்க மனிதர்களே இந்த பாதிப்புக்கு காரணம்.

    கேரளாவில் மழை காரணமாக 44 அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளை மாநில அரசு ஒரே நேரத்தில் திறந்துவிட்டது. அணைகளை திறக்கும்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கையை விடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கேரள அரசு மேற்கொள்ளவில்லை. நள்ளிரவில் கேரள மக்கள் தூங்கிக்கொண்டிருந் தபோது அணைகளை எல்லாம் அரசு திறந்துவிட்டுள்ளது. எனவே இது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையும் கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு மாநில அரசை குறை கூறி உள்ளார். மாநில அரசின் அலட்சிய போக்கால் இந்த பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவிப்புக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.  #KeralaFloods
    ×